தர்மபுரி, நவ.16: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 83 புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து, புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சனை, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 83 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 83 மனுக்கள் மீது உடனடியாக விசாரணை முடித்து வைக்கப்பட்டது. இதுதவிர, நேற்று முகாமில் புதியதாக 19 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் டிஎஸ்பி்க்கள் ராமசந்திரன், நாகலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சரவணன், ஷர்மிளா மற்றும் எஸ்ஐகள், போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.