கூடலூர் ஏப். 28: குமுளி ஹோட்டலில் ரூ.50 ஆயிரம் பணம், மொபைல் போன் திருடிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் குமுளி நகரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாருல்(20) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் குமுளி பேருந்து நிலையம் அருகே உள்ள மற்றொரு ஹோட்டலில் சில நாட்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் பணம், செல்போனை திருடிச் சென்றுள்ளார்.
இதுதொடர்பாக குமுளி இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையிலான போலீசார் அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் பெரும்பாவூர் பகுதியில் பதுங்கியிருந்த ஜாருலை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து பணம், செல்போனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஜாருலை பீருமேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.