திருச்செங்கோடு, மே 8: மல்லசமுத்திரம் காவல்நிலையம் அருகே நீண்டநாட்களாக தேங்கியுள்ள குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மல்லசமுத்திரம் காவல்நிலையம் சேலம் சாலையில் உள்ளது. இதனருகே நீண்ட நாட்களாக மூட்டை மூட்டையாக குப்பை கழிவுகள் காணப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இவ்வழியாக செல்லும் மக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் சுவாச கோளாறுகள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குப்பையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் பறந்து அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் விழுகிறது. எனவே, இவ்விடத்தில் உள்ள குப்பைகளை அகற்றி, குப்பைகளை கொட்டாமல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.