Monday, June 16, 2025
Home மாவட்டம்கோயம்புத்தூர் கிரைம் செய்திகள் கொலை வழக்கு சாட்சியை மிரட்டியவர் கைது

கிரைம் செய்திகள் கொலை வழக்கு சாட்சியை மிரட்டியவர் கைது

by Karthik Yash

கோவை, ஜூன் 18: கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சூர்யா (33). இவரது நண்பர் சேகர் (29). இவர்கள் இருவரும் கடந்த 2022ம் ஆண்டு உக்கடம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் பிஎன் புதூர் ரங்கே கவுண்டர் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (38) என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இருவருக்கும் எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்லி வந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சூர்யாவுக்கும், பிரகாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சூர்யா தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என பிரகாசை தொடர்ந்து மிரட்டி வந்தார். இந்நிலையில், பிரகாஷ் உக்கடம் பைபாஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சூர்யா மற்றும் சேகர் ஆகியோர் மீண்டும் அவரை மிரட்டினர். வாக்குவாதம் முற்றியதில் இருவரும் கத்தியை காட்டி தங்களுக்கு எதிராக செயல்பட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுகுறித்து பிரகாஷ் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சாட்சியை மிரட்டிய சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சேகர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi