எப்படிச் செய்வது : இஞ்சி, பூண்டை நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பல்லாரியை நீளவாக்கிலும், கேரட்டை சிறுதுண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்புத்தூள் போடவும். இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும். பின்னர் பல்லாரி, பச்சை மிளகாய், கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். இக்கலவையுடன் பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறவும். கலவை சேர்ந்ததும் குக்கருக்கு மாற்றி, அரிசியின் அளவில் 2 மடங்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் வந்ததும் நிறுத்தவும். சுவையான கிரீன் பீஸ் புலாவ் ரெடி.
கிரீன் பீஸ் புலாவ்
81
previous post