சென்னை, ஜன.31: காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காந்தி நினைவு தினம் நேற்று காலை 11 மணிக்கு அனுசரிக்கப்பட்டது. அப்போது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் முன்னிலையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பிறகு ‘ தீண்டாமை ஒழிப்பு’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி, இணை கமிஷனர் கயல்விழி, தலைமையிட துணை கமிஷனர் மகேஷ்குமார், மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் தேவராணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.