நத்தம், ஜூலை 5: வேடசந்தூர் குட்டத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (47). இவர் தனது அண்ணன் தர்மராஜன் (50) என்பவருடன் டூவீலரில் நத்தத்தில் வெள்ளக்குட்டு பகுதிக்கு சொந்த வேலை நிமித்தமாக வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அம்மன் குளம் பகுதியில் எதிரே, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த நேதாஜி (47) என்பவர் ஓட்டி வந்த கார், இவரது டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.