செய்முறை: ஒரு கடாயில் சர்க்கரையும், தண்ணீரையும் நன்றாகக் கலந்தபின் அடுப்பில் ஏற்றி நன்றாகக் கொதிக்க விடவும். முந்திரிப்பருப்பை நன்றாகப் பொடித்து, தயார் செய்த பாகில் சிறிது சிறிதாகக் கொட்டிக் கிளறிக்கொண்டு வந்தால், கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும். கீழே இறக்கும் நேரத்தில் நெய் விட்டு இறக்கி, உடனே ஒரு அலுமினியத் தட்டில் கொட்டி சிறிது ஆறியவுடன் வில்லைகளாக வெட்டவும்.