தர்மபுரி, செப்.9: மாரண்டஅள்ளி, திம்லாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் வினோதினி (18), அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து மாரண்டஅள்ளி போலீசில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், தொப்பூர் பாகல்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் சரண்யா (18). தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி கல்லூரிக்கு சென்ற சரண்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தொப்பூர் போலீசில் பெற்றோர் புகாரளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.