பெரம்பலூர் நகரில் 25 ஆண்டு களாக திறம்பட செயல்பட்டு வெள்ளிவிழா கொண்டாடும் உழவர் சந்தையை இன்று காலை 8மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட உள்ளனர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் பாபு, பெரம்பலூர் மாவட்ட தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் சத்தியா, பெரம்பலூர் வேளாண்மை துறை வேளாண் வணிகம் துணை இயக்குனர் கோவிந்தராஜ் மற்றும் வேளாண் அலுவலர்கள்,உதவி வேளாண் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.