தேனி, ஜூலை 1: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி தலைமை வகித்தார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கொண்ட 350 மனுக்களை அளித்தனர். இம்மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் இளங்கோ, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவபாலன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் காமாட்சி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி மற்றும் பல்வேறுத் துறை மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.