கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சொக்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நாடிமுத்து. விவசாயி. இவரது மகன் சத்யராஜ்(35). இவர் கறம்பக்குடியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கடந்த 5 வருடங்களாக மேனேஜராக பணி புரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கம் போல தனது டூவீலரில் வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை நாடிமுத்து கறம்பக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.