ஈரோடு, ஜூன் 28: கோபி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஆசனூர் செக்போஸ்ட் பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை பிடித்து சோதனையிட்டதில் அவர், கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்த எழிலரசு (31), என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் கடத்தி வந்த 3 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.