கரூர், மே 6: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு தனியார் நிறுவன ஊழியர் தவறி விழுந்து இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(25). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 3ம்தேதி வாட்டர் டேங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி சாலையில் விழுந்தார். காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், வெங்கமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.