கரூர், ஏப். 17: கரூர் ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்கள் இயக்கப்படும் நேரத்தை முறைப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் மாநகராட்சியின் மையப் பகுதியான ஜவஹர் பஜாருக்கு மாட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், வர்த்தக நிறுவனங்களுக்கு பொருட்களை இறக்கிச் செல்ல ஏராளமான கனரக வாகனங்கள் வருகின்றன. இதனால், இந்த சாலையில் வாகன நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.
இந்த பஜாரில் இருந்து மக்கள் பாதை, மார்க்கெட், மாரியம்மன் கோயில், லைட்ஹவுஸ கார்னர், உழவர் சந்தை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு கட்ரோடுகளும் பிரிகின்றன. அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று வருவதால், ஜவஹர் பஜாருக்கு அடிக்கடி கனரக வாகனங்கள் வந்து செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே, இந்த பஜாருக்கு வரும் கனரக வாகனங்களை கண்காணித்து முறைப்படுத்தி, பாேக்குவரத்து பாதிப்பை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.