Sunday, June 15, 2025
Home மாவட்டம்திருச்சி கட்டாய திருமணம் செய்ய இளம்பெண்ணை வற்புறுத்தல்

கட்டாய திருமணம் செய்ய இளம்பெண்ணை வற்புறுத்தல்

by Arun Kumar

 

திருவெறும்பூர், மே 27: திருவெறும்பூர்அருகே இளம்பெண்ணை கட்டாய திருமணம் செய்ய வற்புறுத்தியதாக பெற்றோர்கள் பற்றி, மகளே போலீசாருக்கு தகவல் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி தெற்குமலை செடிமலை முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது தனது 20 வயது மகளை கட்டாய திருமணத்திற்கு உட்படுத்தப்படுவதாக போலீஸ் உதவி எண் 100க்கு தகவல் நேற்று கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள துவாக்குடி போலீசாருக்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவிட்டப்பட்டது. துவாக்குடி எஸ்ஐ நாகராஜன் மற்றும் சோஷியல் வெல்பேர் டிபார்ட்மெண்ட் அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண்ணின் பெற்றோர் மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிப்பது தெரியவந்தது, அதன் அடிப்படையில், பெற்றோரை போலீசார் எச்சரிக்கை செய்தனர். தொடர்ந்து பெண்ணிடம் சமரசம் பேசி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi