Tuesday, June 24, 2025
Home மாவட்டம்ஈரோடு கடன் தொல்லை: வாலிபர் தற்கொலை

கடன் தொல்லை: வாலிபர் தற்கொலை

by Arun Kumar

 

ஈரோடு, மே 25: சத்தியமங்கலம் அடுத்த கொண்டப்பநாய்க்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சுகமூர்த்தி (34). இவரது மனைவி தனபாக்கியம். இத்தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான சுகமூர்த்தி, அடிக்கடி மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 21ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சுகமூர்த்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாய் போமதி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi