ஈரோடு, ஏப்.26: ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கனிராவுத்தர் குளம், காந்தி நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஈ.பி.பி. நகரை சேர்ந்த சரவணன் (38), சூளை நெசவாளர் காலனியை சேர்ந்த ரமேஷ் (36) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள், விற்பனைக்கு வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 1.100 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது
0