சேலம், செப்.21: ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து ரயிலிலும், காரிலும் கஞ்சாவை கடத்தப்பட்டு வருவதைதடுக்கும் வசையில் ரயில்வே போலீசாரும், அந்தந்த மாவட்ட போலீசாரும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சேலம், மாநகரில் கஞ்சா விற்பதைதடுக்கும் வகையில், மாநகர் முழுவதும் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் சூரமங்கலம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டதில், அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நடந்த சென்றவரைபிடித்து விசாரித்தனர்.அதில், அவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அய்யங்கரட்டூர் பகுதியை சேர்ந்த கோபாலசாமி(37) என்பதும், கஞ்சாவை கடத்தி வந்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.