Sunday, June 22, 2025
Home மாவட்டம்கடலூர் ஒரே சேலையில் கணவன், மனைவி தூக்குபோட்டு தற்கொலை

ஒரே சேலையில் கணவன், மனைவி தூக்குபோட்டு தற்கொலை

by Ranjith

 

பண்ருட்டி, மே 29: ஒரே சேலையில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமரவேல்(32), பால் வண்டி டிரைவர். இவரது மனைவி மீனா(20). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இவர்கள் வீட்டு மாடியில் தனியாக வசித்து வந்தனர்.

கீழ் வீட்டில் குமரவேலின் பெற்றோர் வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்ற குமரவேல் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை குமரவேலின் பெற்றோர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் ஒரே சேலையில் கணவன், மனைவி இருவரும் மின்விசிறி கொக்கியில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-.இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பலம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi