சேந்தமங்கலம், அக்.14: சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு பேசினார்.சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் துணை செயலாளர் பொன்னுசாமி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். நகர திமுக செயலாளர் தனபாலன் வரவேற்று பேசினார். இதில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி, கலந்துகொண்டு பேசுகையில், ‘இந்த கூட்டத்தில் சேந்தமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள், காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளீர்கள்.
நாமக்கல் அருகே, முதல்வர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சியிலும் ஒன்றிய பேரூர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில், மாவட்டத் துணைச் செயலாளர் ராணி, ஓட்டுனர் அணி அமைப்பாளர் நல்லு ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன், ஒன்றிய குழு தலைவர் மணிமாலா சின்னுசாமி, துணைத் தலைவர் கீதா வெங்கடேஸ்வரன், பேரூராட்சி தலைவர்கள் சித்ரா, பாப்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கா ளப்பநா யக்கன்பட்டிபேரூர், திமுக செயலாளர் முருேகசன் நன்றி கூறினார்.