ஒடுகத்தூர், மே 31: ஒடுகத்தூர் வார சந்தையில் ரூ.25 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் வெள்ளிக்கிழமைதோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தற்போது வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் வைகாசி திருவிழா களைகட்டி வருகிறது. அடுத்த வாரம் (7ம்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் வாராந்திர ஆட்டுச்சந்தை நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் கூடியது. செம்மறி ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்தது. இதனால் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. வழக்கமாக செம்மறி ஆடுகளின் விலை ேஜாடி ரூ.25 ஆயிரம் வரையும், வெள்ளாடுகள் ேஜாடி ரூ.20 ஆயிரம் வரையும் விற்பனையாகும். ஆனால் நேற்று செம்மறி ஆடு ஜோடி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், வெள்ளாடு ஜோடி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ரூ.25 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.