மேட்டூர், ஜூலை 16: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து, விநாடிக்கு 1000 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 500 கனஅடியாக சரிந்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 130 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 142 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 77.61 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 76.70 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 38.74 டிஎம்சியாக உள்ளது.