ஏற்காடு, ஜூன் 6: ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளைக்கடை பெரியேரிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கரியராமன் மனைவி பாப்பா(37). ஏற்காடு மஞ்சகோட்டை கிராமம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் மிளகு பறிக்கும் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 23ம் தேதி பாப்பா மிளகு பறித்து கொண்டிருந்தபோது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பாப்பா உயிரிழந்தார். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்காட்டில் மிளகு பறித்தபோது தவறி விழுந்து பெண் பலி
0
previous post