கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் எங்கு பார்த்தாலும் குளிர்சாதன அறைகளும், குளிர் சாதன வீடுகளும் தான் கண்ணுக்கு தெரிகிறது. கோடையில் இருந்து தற்காலிகமாக தப்பிப்பதற்காக குளிர் அறைகளில் மனிதன் தஞ்சம் புகுகிறான். இந்த குளிர்சாதன வசதி மனிதனுக்கு பல இன்னல் களையும் பெற்றுத் தருகின்றது என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய உடல் சுற்றுப்புற வெப்பத்துக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது. ஆனால் குளிர் அறைகளில் இருக்கும் போது செயற்கை யான சமநிலை கிடைத்து விடுவதால் உடலின் செயல்பாடு தேவையற்றதாகி விடுகிறது. உடல் தன்னுடைய இந்த செயலை பயன்படுத்தாத போது சேமிக் கப்படும் சக்தி கொழுப்பாக மாறி உடலில் தேங்குகிறது. கடைசியில் இது உடல் பருமனுக்கு வழிசெய்து விடுகிறது. குளிர்சாதன அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு இன்னொரு பெரிய சிக்கல் இருக்கிறது. மனித உடல் அறைகளிலுள்ள குளிர் காலநிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு அதிக நேரம் அங்கேயே செலவிடுகிறது. இதனால் வெளியிலுள்ள வெப்பத்தைத் தாங்கும் திறன் உடலுக்கு குறைகிறது. குளிர் அறைகளை விட்டு நிஜத்தின் வீதிகளுக்கு வரும்போது வெப்ப அலைகள் குளிர் நிலையிலுள்ள உடலை அதிகமாய் பாதித்து விடுகின்றன. இதனால் தான் குளிர் அறைகளில் இருப்பவர்கள் வெளியே வந்ததும் பதறி ஓடுகிறார்கள். குளிர்சாதனம் நம்மை எப்போதுமே இரண்டு விதமான காலநிலைகளில் வாழச் செய்கிறது. குளிர் அறையிலிருந்து வெளியே வருவதும், பிறகு உள்ளே செல்வதும் என வாழ்க்கை ஓடும் போது உடல் அதற்குரிய மாற்றங்களை விரைவில் செய்ய வேண்டியிருப்பதால் பல நோய்களைக் கொண்டு வந்து விடுகிறது. பெரும்பாலான அலுவலகங்களில் அதிக நேரம் குளிர்சாதன கருவிகள் ஓடும் போது ஒரே காற்றை திரும்ப திரும்ப சுழற்சியாய் பயன்படுத்துவதால் காற்றில் இருக்கும் மாசு வெளியே எங்கும் செல்லாமல் சுவாசத்தில் கலந்து விடுகிறது. இது தொற்று நோய்க் கிருமிகள் யாராவது ஒருவரிடம் இருந்தாலே அந்த அறையிலுள்ள அனைவரையும் விரைவில் பற்றிக் கொள்கிறது. சிக் பில்டிங் சிண்ட்ரோம் (SBC) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நோய்களுக்கு குளிர் சாதன மும் ஒருமுக்கிய காரணம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தலைவலி, சிறு மயக்கம், சைனஸ், கண் எரிச்சல், கண்ணில் கண்ணீர் வழிதல், தொண்ட பிரச்சனைகள் என பல அறிகுறிகளைக் கொண்டது தான் இந்த சிக் பில்டிங் சிண்ட்ரோம். குளிர் சாதன பெட்டிகள் ஈரப்பதமுள்ள காற்றை உலரவைத்துக் குளிர வைத்து அனுப்புகிறது. இந்த மாற்றம் அலர்ஜி நோய் உள்ள வர்களை பெருமளவில் பாதிக்கும் என்கிறார் சர்வதேச மருத்துவர்கள்.குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா?பொதுவாகவே ஏசி உடம்புக்குக் கெடுதல் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் நம்முடையது மாதிரியான வெப்ப மண்டலப் பிரதேசங்களில் குறிப்பாகக் கோடை காலங்களில் குழந்தைகளை ஏசி அறையில் இருக்கலாம். அதில் எந்தத் தவறுமில்லை. தூசி, குப்பை, வெயில், வியர்வை என மாசுபாட்டையும், அசவுகரி யத்தையும் குறைக்க ஏசி போட்டுக் கொள்ளலாம். சுமார் 24- 26 டிகிரி வெப்ப நிலையில் ஏசி இருக்க வேண்டும். உரிய ஆடைகளை அணிவித்து, அம்மாவின் அணைப்பில் குழந்தையை இருப்பது நலம் பயக்கும். அதே நேரத்தில் ஏசியை முறையாக 3 மாதங்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்த வேண்டும். குடிக்க ஐஸ் வாட்டர் கொடுக்கலாமா?: சிறு குழந்தைகளுக்கு ஐஸ் வாட்டர் கொடுக்கக் கூடாது. வளர்ந்த சிறுவர், சிறுமியருக்கு குளிர் நீருடன் சாதாரண நீரைக் கலந்துகொடுக்கலாம். ஐஸ் துண்டுகளைச் சாப்பிட அனுமதிக்கக் கூடாது. கோடை காலத்தில் அதிகம் பசிக்காதது ஏன்?: பெரும்பாலான குழந்தைகள் இந்த நேரத்தில் பசியில்லை என்று கூறுவர். இதற்குக் காரணம் அவர்கள் அதிகத் தண்ணீரை உட்கொள்வதுதான். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. பசிக்கு டானிக் கொடுப்பது சரியான முறையல்ல. பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?: பழங்கள் உண்டால் சளி பிடிக்கும் என்பது மிகவும் தவறான கருத்து. இரண்டு க்கும் சம்பந்தமே இல்லை. பழச்சாறை அதிகம் அருந்தினால் வயிற்றுப் போக்கு ஏற்படுமா ஆம், குழந்தைகள் லிட்டர் கணக்காகப் பழச்சாறு அருந்துதல் முறையல்ல. அப்படிச் செய்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
ஏசி உடலுக்கு நல்லதா? தீங்கானதா?
71
previous post