தேன்கனிக்கோட்டை, ஏப்.25: தேன்கனிக்கோட்டை தாசில்தார் மங்கை தலைமையில், வருவாய்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, கோட்டை வாசல் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டிப்பர் லாரியை நிறுத்தினர். லாரியை நிறுத்திய டிரைவர் கீழே இறங்கி தப்பியோடி விட்டார். அதிகாரிகள் லாரியை சோதனை நடத்தியதில், அதில் ஆவணங்கள் ஏதுமில்லாமல் எம்.சாண்டு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
0
previous post