ஈரோடு: ஈரோடு அடுத்த காஞ்சிக்கோயில் காமராஜர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் விஷ்ணுபிரியா (19). இவர், கோவையில் உள்ள தனியார் நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். விஷ்ணுபிரியா கடந்த 7ம் தேதி அவரது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டு, அங்கிருந்து அவரது வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் விஷ்ணுபிரியா கிடைக்கவில்லை. இதுகுறித்து பழனிச்சாமி நேற்று முன்தினம் காஞ்சிக்கோயில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விஷ்ணுபிரியாவை தேடி வருகின்றனர்.