தர்மபுரி, ஏப்.26: அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி வேடகட்டமடுவு பகுதியை சேர்ந்தவர் கவியரசு. இவரது மனைவி காவியா (27). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கவியரசு கோவையில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். கடந்த 23ம் தேதி காவியா வீட்டில் குழந்தைகளை விட்டு விட்டு, கவியரசுவை பார்க்க கோவை செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் கோவைக்கு அவர் செல்லவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மாயமான காவியாவை தேடி வருகின்றனர். இதேபோல், மொரப்பூர் அடுத்த எம்.தொப்பம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகள் கனிமொழி (21). இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 19ம் தேதி கனிமொழி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இளம்பெண் மாயம்
0
previous post