திண்டுக்கல், நவ. 16: திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே உள்ள அழகு சமுத்திரப்பட்டியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மனைவி சர்மிளா(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் மணிவேல் மில் வேலைக்கு சென்று விட்டார். சர்மிளா நேற்று யாரும் இல்லாத போது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தாடிக்கொம்பு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சர்மிளாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு எஸ்ஐ பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.