கிருஷ்ணகிரி, ஜூன் 5: கிருஷ்ணகிரி குருபரப்பள்ளியை சேர்ந்த 20 வயது இளம்பெண், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த பசுவராஜ் (26) என்பவர், எனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அவரிடமிருந்து மகளை மீட்டு தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் கடத்தல் வாலிபர் மீது புகார்
0
previous post