வேலூர், மே 28: வேலூரில் இளம்பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறார். கடந்த 22ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் குறித்து தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் இளம்பெண்ணின் தந்தை நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதில், தனது மகளை ரங்காபுரம் பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர் கடத்தியிருக்கலாம் என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண் மற்றும் கடத்தியதாக கூறப்படும் வாலிபரை தேடி வருகின்றனர்.