பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 25: பாப்பிரெட்டிப்பட்டி அருகே வடகரை கிராமத்தை சேர்ந்தவர் சச்சின்(27), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி(21). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களுக்கும், உறவினரான ரேஷ்மாவுக்கும் வீட்டுமனை தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த 23ம் தேதி பிரியதர்ஷினி வீட்டில் இல்லாத நேரத்தில், ரேஷ்மா, அவரது கணவர் கார்த்திக், தாய் பூங்கொடி ஆகிய மூவரும், பிரியதர்ஷினி வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்தனர். வெளியில் சென்றிருந்த பிரியதர்ஷினி, கணவர் சச்சின் ஆகியோர், மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து போட்டது குறித்து ரேஷ்மாவிடம் கேட்டனர்.
இதனால், இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில், பிரியதர்ஷினி, சச்சின் ஆகியோரை ரேஷ்மா மற்றும் கார்த்திக், பூங்கொடி ஆகியோர் தகாத வார்த்தையில் திட்டி கை மற்றும் கட்டையால் அடித்துள்ளனர். இது குறித்து கோபிநாதம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இருதரப்பு கொடுத்த புகாரின் ேபரில், ரேஷ்மா(27), கார்த்திக்(30), பூங்கொடி(45) மற்றும் சச்சின்(27) ஆகிய 4பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.