தா.பழூர்:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சவேரியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் லூகாஸ் (52)விவசாயி. இவர் சொந்த வேலை காரணமாக தா.பழூர் சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் சவேரியார் பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கோட்டியால் கிராமத்திற்கும் நால்ரோடுக்கும் இடைப்பட்ட பகுதியில் சென்ற போது அப்பகுதியில் சாலையின் ஓரத்தில் நிலக்கடலை காயவைக்கப்பட்டிருந்தது.
அந்த இடத்தில் வரும் போது எதிர்பாராத விதமாக லூகாஸ் சாலையில் தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பழூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று லூகாஸ்ன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லூகாஸ் மனைவி விமலா அளித்த புகாரின் பேரில் தா.பழூர் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.