கோவை, பிப். 20:கோவை வடவள்ளி விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் ஜெயபால் (43). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஜெயபால் மனைவிகளை பிரிந்து தனது தாயார் பிரேமாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜெயபால் உடல் நிலை சரியில்லாமல் கடந்த சில நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஜெயபாலுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.