வில்லிபுத்தூர், மே 29: வில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 30வது கிளை மாநாடு நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நகர் செயலாளராக மூர்த்தி, நகர துணைச்செயலாளராக கந்தசக்தி மற்றும் சிவா ஆகியோர்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன ராமசாமிமற்றும் முன்னாள் எம்பிக்கள் அழகிரிசாமி, லிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பொன்னு பாண்டியன் உட்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.