திருவனந்தபுரம், ஏப்.17: ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா அருகே பூச்சாக்கல் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி வனஜா (50). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் விஜீஷ் (42). சரவணனுக்கும், விஜீஷுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விஜீஷ் திடீரென சரவணனின் வீட்டுக்குள் புகுந்து சுத்தியலால் அவரது மனைவி வனஜாவை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வனஜா கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி வனஜா இறந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பூச்சாக்கல் போலீசார் தப்பி ஓடிய விஜீஷை தேடி வருகின்றனர்.
ஆலப்புழா அருகே சுத்தியலால் அடித்து பெண் படுகொலை
0