Thursday, June 19, 2025
Home மாவட்டம்கடலூர் ஆபரேஷன் சிந்தூரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் துப்பாக்கி, தொப்பி, ஷூக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தும் மர சிற்பம்

ஆபரேஷன் சிந்தூரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் துப்பாக்கி, தொப்பி, ஷூக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தும் மர சிற்பம்

by Karthik Yash

புதுச்சேரி, மே 24: ஆபரேஷன் சிந்தூரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ராணுவ வீரர்களின் துப்பாக்கி, தொப்பி மற்றும் ஷூ ஆகியவற்றிற்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவது போன்ற மர சிற்பங்களை தத்ரூபமாக உருவாக்கி அரசு கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார். புதுச்சேரியை அடுத்த சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (19). புதுச்சேரி அரசு பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண் கலை அறிவியல் பயின்று வருகிறார். இவர் பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்படும் மரப் பொருட்களை வைத்து பல்வேறு வடிவங்களில் விழிப்புணர்வு சிலைகள், விலங்குகள், பறவைகள், தேசத் தலைவர்களின் உருவ பொம்மைகள் மற்றும் மர சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சிற்பங்களை உருவாக்கி அசத்தி வருகிறார்.

அந்த வகையில் இந்தியா-பாகிஸ்தான் போரில் ஆபரேஷன் சிந்தூரின்போது உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்பட்ட தென்னைமர ஓலைகள், தென்னை மர நாறு, பனைமர பொருட்கள், பாக்குமரத் தட்டுகள், மூங்கில், கம்பு மற்றும் சோள தட்டுகள் பிளாஸ்டிக் பொருட்கள், பஞ்சு வகைகள் உள்ளிட்ட வேஸ்ட் பொருட்களைக் கொண்டு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி, அவர்கள் அணியும் தொப்பி மற்றும் ஷூ போன்றவைகளை உருவாக்கியும், போரின்போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவது போன்றும் தத்ரூபமான சிற்பங்களை உருவாக்கி சிற்ப கலையில் அசத்தியுள்ளார்.

இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. புதுச்சேரி மரப்பாலத்தில் உள்ள நுண்கலை பயிற்சி மையத்தில் உருவாக்கிய ராணுவ வீரர்களின் படைப்பை ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். மேலும் சிலர் போட்டோ எடுத்தும், செல்பி எடுத்து கொண்டும் செல்கின்றனர். போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தும் விதமாக மரப் பொருட்களால் உருவாக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்திலும் வைரலாகி ‌வருகிறது. மாணவன் ஜெகதீஷ் சேலியமேடு அரசு பள்ளியில் பயிலும்போது உமாபதி என்ற ஆசிரியரிடம் நுண் கலையை கற்றுக் கொண்டார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi