கீழ்வேளூர், மே 8: எட்டுக்குடியில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழாவை கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் 4ம் நாளான நேற்று முன்தினம் இரவு வெள்ளி ஆட்டுகிடா வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளினார். அதன் பின்னர் ரதக்காவடி ஊர்வலத்துடன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 11ம் தேதி நடைபெறுகிறது. முருகனுக்கு 12ம் தேதி, 60 மணி நேரம் இடைவிடாது பாலபிஷேகம் நடைபெறும்.