Saturday, June 14, 2025
Home மாவட்டம்சேலம் ஆடு, கோழி, காய்கறிகள் விற்பனை அமோகம்

ஆடு, கோழி, காய்கறிகள் விற்பனை அமோகம்

by Karthik Yash

இடைப்பாடி, மே 25: இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் சனி சந்தைக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் 12000 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 2400 பந்தய்அ சேவல் மற்றும் கோழிகள், 122 டன் காய்கறிகள், 10 டன் பலாப்பழம் விற்பனையானது. 10 கிலோ எடையுள்ள செம்மறி மற்றும் வெள்ளாடு ரூ.5900 முதல் ரூ.8,500 வரையும், 20 கிலோ எடையுள்ள ஆடு ரூ.11,800 முதல் ரூ.17,000 வரையும், 30 கிலோ எடையுள்ள ஆடு ரூ.17,500 முதல் ரூ.29 ஆயிரம் வரையும், 40 கிலோ எடையுள்ள ஆடு ரூ.23,500 முதல் ரூ.35 ஆயிரம் வரை விலை போனது. வழக்கத்தை விட கிடாய் ரூ.1500 முதல் ரூ.2000 வரை கூடுதலாக விலை போனது. பந்தய சேவல்கள் ஒன்றோடு ஒன்று மோதவிட்டு ரூ.2000 முதல் ரூ.4000 வரை விலை போனது. பலாப்பழம் ரூ.150 முதல் ரூ.500 வரை விலை போனது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் கிலோ ரூ.15 முதல் ரூ.50 வரை விலை போனது. தக்காளி 25 கிலோ கொண்ட பெட்டி ரூ.300 முதல் ரூ.425 வரை விலை போனது. மொத்தமாக ரூ.6 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். சனிசந்தை திருவிழா கூட்டம் போல களைக்கட்டி இருந்தது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi