தர்மபுரி, ஜூலை 27: தர்மபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 3ம்தேதி ஆடிப்பெருக்கு விழாயொட்டி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் சாந்தி அறிவித்துள்ளார். தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா, வரும் 2ம்தேதி, 3ம்தேதி மற்றும் 4ம்தேதி ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 3ம்தேதி ஆடி 18 விழாவையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, வரும் 3ம்தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் சாந்தி அறிவித்துள்ளார்.
ஆடிப்பெருக்கு விழாவுக்கு தர்மபுரியில் உள்ளூர் விடுமுறை
77
previous post