நீடாமங்கலம்: சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் மும்முனைப்போட்டியில் பங்கேற்று வெங்கல பதக்கம் வென்று சாதனைபடைத்த நீடாமங்கலம் ஒன்றியம் செட்டிசத்திரம் கிராமத்தைச்சேர்ந்த பிரவீன்சித்திரவேலுக்கு நீடாமங்கலம் தனியார் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் நீலன்.அசோகன் தலைமை வகித்தார். செயலாளர் சுரேன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், தன்னம்பிக்கை வட்ட மாவட்ட தலைவர் குமாரசாமி, மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ராஜாராமன்,விளையாட்டுவீரரின் பெற்றோர்கள் பிரேமா,சித்திரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.