திருமயம். ஏப்.29: அரிமளம் சிவன் கோயிலில் கும்பகோணம் சிவதொண்டர் குழுவினர் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் நகர சிவன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில், எதிர்வரும் ஓரிரு வாரங்களில் திருவிழா நடைபெற உள்ளது.
அது சமயம் கோயிலை சுத்தம் செய்து உழவாரப்பணி மேற்கொள்ள கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, 30 பேர் கொண்ட சிவனடியார் குழுவினர் அரிமளம் சிவன் கோயிலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.