அரவக்குறிச்சி, ஜூலை 6: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் போதிய மின்விளக்குகள் வசதி ஏற்படுத்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் அதிக அளவு காடுகள் நிறைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் ஆங்காங்கே குறிப்பிட்ட தூரம் வரை மின்விளக்கு இல்லாமல் மிகக் குறைந்த அளவில் மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் சாலை விபத்துகள் நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.எனவே இது போன்ற விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் கூடுதல் மின்விளக்குகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி இந்த சாலையை பார்வையிட்டு அதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.