தடி ஊன்றும் வயதிலும் நூல்களைபடி ஊன்றி; நினைவாற்றல் தரும்எலி வாகனமுடைய ஏகதந்தன்என்றும் துணை யாவான் நினைவில்! மயில் வாகனம் மறந்தாயோ முருகாமன வாகனத்தில் ஏற்றிக்கொண்டேன்மயிலாய் எண்ணத்தோகை விரியும்மனசாட்சியில் பிரணவம் புரியும்! நந்திவாகனம் கொண்ட நாயகரேநமசிவாய மந்திரத் தாரகரேகாளையின் உழைப்பே உலகம்கருத்தில் கொள்வோம் கவலை விலகும்! முயற்சி சிறகடித்து கருடனாய்முன்னேறி உயரப் பறப்போம்மூன்றடியில் உலகளந்த வாமனன்மனம் அளந்தளிப்பான் பெற்றிடுக! காலதேவனின் எருமை வாகனம்கர்மதேவனின் காக்கை வாகனம்தர்மதேவனின் நாய் வாகனம் -வாழ்க்கைபுதிர்களை அவிழ்க்கும் ஞானவாகனம்! புலி மீது வரும் ஐயப்பனும்குதிரை மீது வரும் சாஸ்தாவும்வலி தீர்க்க வந்த அவதாரம்ஒலி எழுப்பி ஒளிவீசும் ஆகாயம்! சிங்கம் மீதமர்ந்து அழகுடன்பவனி வரும் பராசக்திதங்க கோபுர கலசமாகஅவனி ஆளும் அருட்சக்தி! தெய்வத் திருவுரு சுமக்கும்தெய்வ அம்ச வாகனம்வீதி உலா வரும்போதுசேதி சொல்லும் ஆகமம்! மனங்களின் சங்கமத்தில் உயிர்பயணம்மூங்கில் மீது உடல் பயணம்இறைவன் திருவடி நிழல் சேரஈடில்லா பக்தியே வாகனம்! தொகுப்பு: விஷ்ணுதாசன்…