செய்யாறு, மே 8: செய்யாறு தாசில்தார் அசோக்குமார், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கடந்த 5ம் தேதி மாலை சுண்டிவாக்கம் கிராமத்தில் ஆய்வுக்கு சென்றனர். அப்போது சிலர் விவசாய நிலத்தில் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த வருவாய் துறையினர் அந்த நபர்களிடம் விசாரித்தனர்.
அதில் அதே கிராமத்தை சேர்ந்த தேவன் என்பதும், அவருக்கு சொந்தமான நிலத்தில் வருவாய் துறையினரிடம் அனுமதி பெறாமல் மண் அள்ளிக்கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதை கேட்டபோது தேவன், வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து தாசில்தார் அசோக்குமார் செய்யாறு போலீசில் நேற்றுமுன்திகம் புகார் செய்தார். அதன்பேரில் விவசாயி தேவன் மீது சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.