காங்கயம், ஜூன்27: காங்கயம் பகுதியில் சட்ட விரோதமாக கனிமவளங்கள் கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து திருப்பூர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தப்பட்டது. காங்கயம் – முத்தூர் ரோடு பிரிவு அருகே அனுமதி இன்றி 9 யூனிட் ஜல்லிகற்கள் ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்தனர்.வாகனத்தை பறிமுதல் செய்து காங்கயம் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.