காரிமங்கலம், நவ.18: காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பஞ்சாயத்து, பூலாப்பட்டி ஏரியில் சட்ட விரோதமாக பொக்லைன் இயந்திரம் மூலம், மண் எடுக்கப்பட்டு டிராக்டர் மூலம் கடத்தி செல்வதாக, வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ், விஏஓ முருகன் மற்றும் அலுவலர்கள் அந்த ஏரியில் சோதனை மேற்கொள்ள சென்றனர். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளும் பணியில் ஈடுபட்ட நபர்கள், அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, ஏரியில் மண் அள்ள பயன்படுத்திய கொட்டுமாரனஅள்ளியைச் சேர்ந்த சின்னசாமிக்கு சொந்தமான பொக்லைனை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விஏஓ முருகன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.