சென்னை: வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின்நிலையங்களில் கொதிகலன் பழுது காரணமாக 710 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வடசென்னை அனல் மின்நிலைய 1-வது நிலையின் 3-வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வல்லூர் அனல்மின்நிலைய 3-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது….