Saturday, September 30, 2023
Home » அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது ேமலும் ஒரு அவதூறு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது ேமலும் ஒரு அவதூறு வழக்கு

by Karthik Yash

விழுப்புரம், செப். 13: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் கடந்த 7.3.2023 அன்று அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அதில் தமிழக அரசைஅவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வரும் அக்டோபர் 9ம் தேதி நேரில் ஆஜராக விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் கடந்த மார்ச் 10ம் தேதி நடந்த அதிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் முதலமைச்சரையும், ஆட்சிக்கு நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று மேலும் ஒரு அவதூறு வழக்கை அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கிலும் வரும் அக்டோபர் 9ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சி.வி.சண்முகத்துக்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?