கரூர், ஜூன். 25: குற்றவழக்குகளில் பறிமுதல் செய்தவாகனங்கள் 27ம் தேதி ஏலம் விடப்படுதவதாகவும் காப்பு தொகை செலுத்தி பங்குபெறலாமென கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்ட மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யபட்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14(4)-ன்படி அரசுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ள 9 இரண்டு சக்கர வாகனங்கள் தமிழ்நாடு அரசாணை எண். G.O.Ms.41 Home, Prohibition and Excise (VIII) Department Dated 21.08.2024 21.08.2024-ல் குறிப்பிட்டுள்ளபடி கரூர் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து 27.06.2025ம் தேதி காலை 11.00 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது.
மேற்படி வாகனங்களை கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 26.06.2025ம் தேதி காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நேரில் பார்வையிடலாம், பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அலுவலகம், இரண்டாம் தளத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் தங்களது ஆதார் கார்டு நகல் அல்லது ரேஷன் கார்டு நகலுடன் காப்பு தொகையாக ரூ1000/- செலுத்தி 26.06.2025ம் தேதி மாலை 5.00 மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். வாகனம் ஏதும் ஏலத்தில் எடுக்கவில்லையெனில் செலுத்திய காப்புத்தொகையை ஏலம் முடிந்தவுடன் திருப்பி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்
பொது ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் கோரும் நபருக்கு வாகனம் விற்பனை செய்யப்படும். மேலும் உறுதி செய்யப்பட்ட வாகன ஏலத்தொகைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள மத்திய சரக்கு மற்றும் சேவைவரி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவைவரி 9% உடன் சேர்த்து முழுவதையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை அன்றைய தினமே உள்ளது உள்ளபடியே என்ற நிலையில் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தொடர்புக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, அலுவலகத்தினை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.